இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

அகமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.  இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. 

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக

ஆகியோர் களம் இறங்க்னர். இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த இணை பிரிந்தது. டக்கட் 34 ரன்னிலும், பில் சால்ட் 23 ரன்னிலும் அவுட் ஆகினர்.